தமிழக செய்திகள்

விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. இதனால் பெண்கள் அலறியடித்து ஓடினர்.

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளம் அருகே உள்ள முரடன் வட்டத்தை சேர்ந்தவர் குமார். இவரது நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது. பெண்கள் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதனால் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் ஏலகிரிமலை காப்பு காட்டில் விட்டனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு