தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது

கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு 2 மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் கற்பகம் அவர்களுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையிலான குழுவினர் கொளத்தூரில் உள்ள 2 மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று அவர்களுக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கினார். அவர்கள் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து