தமிழக செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை நூதன முறையில் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சிகிச்சைக்கு வந்தார்

நாமக்கல் அருகே உள்ள பொம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரியாயி (வயது56). கூலித்தொழிலாளி. இவர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 23-ந் தேதி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், ரத்த பரிசோதனை செய்து வருமாறு அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ரத்த பரிசோதனை நிலையம் சென்று ரத்தம் கொடுத்து விட்டு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பரிசோதனை அறிக்கை வாங்க வந்தார்.

தங்கச்சங்கிலி பறிப்பு

அப்போது அங்கு வந்த சுமார் 40 வயதுடைய நபர், மாரியாயிடம் உங்களுக்கு அரசின் உதவித்தொகை வருகிறதா? என பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் அவர் கையில் வைத்திருந்த பேப்பரில் கையெழுத்து போட சொல்லி உள்ளார். பின்னர் அந்த ஆசாமி கழுத்தில் தங்க சங்கிலி போட்டு இருந்தால், உதவித்தொகை தர மாட்டார்கள் என சொல்லி கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை கழற்றி கொடுக்க சொல்லி, வாங்கிக்கொண்டார்.

பின்னர் மாரியாயியை தாலுகா அலுவலகம் வர சொல்லி விட்டு முன்னால் சென்று உள்ளார். சிறிது நேரத்தில் அவர் மாயமாகி விட்டார். தங்கச்சங்கிலியை நூதன முறையில் பறிக்கப்பட்டதை அறிந்த மாரியாயி இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு