கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பா.ஜனதாவுடன் பேச்சு நடத்த த.மா.கா.வில் 6 பேர் கொண்ட குழு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. களம் காண்கிறது.

தினத்தந்தி

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா. களம் காண்கிறது. எனவே நாடாளுமன்ற தொகுதிகள், எண்ணிக்கைகள் குறித்து பா.ஜனதாவுடன் பேச்சு நடத்த தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு அறிவிக்கப்படுகிறது.

6 பேர் கொண்ட தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில், முன்னாள் எம்.பி.யான பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், என்.ஆர்.ரெங்கராஜன், கே.வி.ஆர்.ராம்பிரபு, பொதுச்செயலாளர்கள் ஏ.எஸ்.சக்திவடிவேல், ஏ.எஸ்.முனவர் பாஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை