தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர் நேற்று முன்தினம் மதியம் பெருமத்தூர் சாலையில் உள்ள தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பார்வதியிடம் வழி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி பார்வதி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு