தமிழக செய்திகள்

டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

டிரான்ஸ்பார்மர் அருகே ஈசல் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மங்கம்மாள் சாலையில் வசித்து வரும் காளிமுத்து மகன் முத்துப்பாண்டி. 16 வயது சிறுவனான முத்துப்பாண்டி வீட்டின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் பறந்த ஈசல்களை பிடித்து கொண்டிருந்தான்.

அப்போது டிரான்ஸ்பார்மரில் உரசியபடி இருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்ததை அறியாத சிறுவன், அக்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு தென்காசி தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து