தமிழக செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய காளை மாடு - மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்

வேலூர் அருகே காரில் சிக்கி விபத்துக்குள்ளான காளை மாட்டை மாவட்ட கலெக்டர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர்,

வேலூர் அருகே காரில் சிக்கி விபத்துக்குள்ளான காளை மாட்டை மாவட்ட கலெக்டர் மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சத்துவாச்சாரியில் உள்ள தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே, நெடுஞ்சாலையில் குறுக்கே சென்ற காளை மாடு மீது ஒரு கார் மோதியது. இதில் காயமடைந்த காளை மாடு சாலையில் விழுந்து கிடந்தது.

இதையறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், காரை நிறுத்திவிட்டு வேகமாக சென்று விபத்தில் காயமடைந்த மாட்டை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மாவட்ட கலெக்டரின் செயலைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை