தமிழக செய்திகள்

பல்லடம் அருகே ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.! பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் படுகாயம்

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யகனி. இவர், தனது 4 வயது மகள் மற்றும் உறவினருடன் பல்லடம் நோக்கி ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.

பல்லடம் தாராபுரம் சாலை அருகே ஆட்டோ வந்துகொண்டிருந்தபோது, எதிரே கரூர் நோக்கி சென்ற கார் ஒன்று, திடீரென வேகமாக ஆட்டோவின் மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து