தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் புதிய பெண் தாசில்தாராக பிரீத்தி என்பவர் பொறுப்பெற்று உள்ளார். தாசில்தார் அலுவலகத்திற்கு அலுவலக வேலையாக வந்த ஒரு சிலர் பணி செய்யவிடாமல் தாசில்தாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தாசில்தார் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் எளாவூரைச் சேர்ந்த அருள், பெரிய ஓபுளாபுரத்தை சேர்ந்த சத்யா, காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் மற்றும் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஆனந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை