தமிழக செய்திகள்

பரிசோதனைக் குழு இல்லாத சோதனைச் சாவடி - பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோபாலபுரம் சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பொள்ளாச்சி,

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக-கேரள எல்லைகளில் சோதனைக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் நிலையில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் சோதனைக் குழு தீவிரமாக கண்காணித்து வரும் வேளையில், கோபாலபுரம் சோதனைச் சாவடியில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு