தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் சேதமடைந்த ஆய்வகம்

நரிக்குடி அருகே அரசு பள்ளியில் சேதமடைந்த ஆய்வகத்தால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

தினத்தந்தி

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வீரசோழன், பாப்பாங்குளம், ஒட்டங்குளம், நல்லுக்குறிச்சி, சுள்ளங்குடி, மேல பருத்தியூர், வரிசையூர், உசிலங்குளம், சம்பக்குளம், தடுத்தலாங்கோட்டை, வீர ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் கட்டிட வசதிகள் மிக குறைவாக உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஆய்வகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் ஆய்வகத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இன்னும் சில மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயத்தமாக வேண்டிய நிலை இருந்து வருவதால் இந்த பள்ளியில் உள்ள சேதமடைந்த ஆய்வகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக ஆய்வகம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து