தமிழக செய்திகள்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

தா.பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்தில் வழித்தவறி வந்த மான் ஒன்று அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அலுவலர்கள் அந்த மானை தும்பலம் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்