தமிழக செய்திகள்

குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து

குரோம்பேட்டையில் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் உள்ளது. நேற்று காலை அங்குள்ள ஒரு துணிக்கடையின் மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், துணிக்கடையின் மாடிக்கு ஏணி போட்டு ஏறி சென்று தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் மாடியில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து