தமிழக செய்திகள்

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

நத்தம் அருகே கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கசங்கிலி பறிப்பு.

தினத்தந்தி

நத்தம் அருகே உள்ள சிறுகுடி மேற்குத்தெருவை சேர்ந்தவர் பாண்டிமீனா (வயது 46). நேற்று காலை 9.30 மணி அளவில் இவர், தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பாண்டிமீனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை அவர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் பாண்டிமீனா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை