தமிழக செய்திகள்

சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலி

ஜோலார்பேட்டை அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வியாபாரி பலியானார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் திம்மனமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 62), இவர் ஊர் ஊராக சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்துவிட்டு சைக்கிளில் பால்நாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் குளிர்சாதன அரசு பஸ் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து