தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பலி

தினத்தந்தி

காரமடை

காரமடை அருகே வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(வயது 60). இவர் காரமடை ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் சங்கரன் சம்பவத்தன்று வழக்கம் போல் பணி முடிந்து ஆசிரியர் காலனியில் இருந்து தனியார் பஸ்சில் தனது வீடு உள்ள வேளாங்கண்ணி பஸ் நிலைய பகுதிக்கு வந்துகொண்டு இருந்தார்.வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது, பஸ்சில் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த சங்கரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்