தமிழக செய்திகள்

ஓசூர் வனப்பகுதியில் தஞ்சம் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் புகுந்துள்ளன. இந்த யானைக் கூட்டம் ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளன. இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

உணவு, தண்ணீர் தேடி யானைகள் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயம், வனப்பகுதி அருகே உள்ள விளைநிலங்களில் நெல் மற்றும் ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை யானைகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு