தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

தினத்தந்தி

செங்குன்றம்,

சென்னை அம்பத்தூரில் இருந்து இரும்பு துகள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் வடகரை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. அதில் இருந்த இரும்பு துகள்கள் சாலை முழுவதும் சிதறின.

இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபி தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் விழுந்து கிடந்த லாரி மற்றும் இரும்பு துகள்களை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு