தமிழக செய்திகள்

சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்

சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்

தினத்தந்தி

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கோம்பு பள்ளம் அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் லாரியில் இருந்த கரும்பு துண்டுகள் முழுவதும் சிதறி சாலையில் விழுந்தன. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்