தமிழக செய்திகள்

ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி

ரூ.2½ கோடியில் ஜாபர்கான் பேட்டையில் நவீன மயான பூமி கட்டுவதற்கு மேயர் பிரியா அடிக்கல் நாட்டினார்.

தினத்தந்தி

சிங்கார சென்னை 2.0 நிதி திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான் பேட்டையில் பழைய பழுதடைந்த மயான பூமி கட்டிடத்தை இடித்து புதிதாக 2 தகன மேடை கொண்ட நவீன மயான பூமி கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அந்த வகையில், ஜாபர்கான் பேட்டையில், டுபிட்கோ நிதியில் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் நவீன மயானபூமி கட்டுமான பணிகளை, மேயர் பிரியா நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ் குமார், மத்திய வட்டார துணை கமிஷனர் ஷேக் அப்துல் ரகுமான், மண்டல தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு