தமிழக செய்திகள்

ராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ராயபுரத்தில் சிறுவர்களுக்கு இடையே தகராறில் மின் இணைப்பு பெட்டி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைப்பெற்றது.

தினத்தந்தி

ராயபுரம் கிரேஸ் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த மோதலில் சிறுவர்கள் 3 பேர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை சிறுவர்கள் மீது வீச முயன்ற நிலையில் தவறுதலாக அங்கு இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு