தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் பலி

விழுப்புரத்தில் லாரி மோதி தனியார் நிதி நிறுவன மேலாளர் உயாழந்தா.

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிபாலன் மகன் சிவபாலன் (வயது 37). இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று சிவபாலன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று சிவபாலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவபாலன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்