தமிழக செய்திகள்

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில் பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்தனர். அவர்கள் சின்சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். ஓட்டுநர் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், தப்பியோடினார். விபத்து நடந்த இடத்தில் வட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்