தமிழக செய்திகள்

"சீக்கிரம் கட்டுடா தாலிய ...!" நடு ரோட்டில் வேக,வேகமாக நடந்த காதல் திருமணம்..!!

காதல் ஜோடி நண்பர்களின் துணையுடன் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இருவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இதற்கு பெண்ணி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து தினேஷ் நண்பர்களின் துணையுடன் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தினேஷ் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கினர். 

SCROLL FOR NEXT