தமிழக செய்திகள்

இமாசல பிரதேசத்தில் சாலை விபத்து: உயிர் இழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை,

மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர் இமாசல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். செல்லும் வழியில் கடந்த 14ந்தேதி பிலாஸ்பூர் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயத்ரி, ஜெயராமன், குமார், ஆகியோர் உயிர் இழந்தனர் என்ற செய்தியையும், 13 பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்து பற்றி அறிந்தவுடன் எனது உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உயிர் இழந்தவர்களின் உடல்களை உடனடியாக மதுரைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சமும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்