தமிழக செய்திகள்

ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

களக்காடு அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தினத்தந்தி

களக்காடு:

வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டு யானை களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் தஞ்சமடைந்துள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று இரவில் சத்திரங்காட்டில் நுழைந்த காட்டு யானை விவசாயி சந்திரசேகருக்கு சொந்தமான விளைநிலத்தில் 3-க்கும் மேற்பட்ட பனைமரங்களை சாய்த்து அட்டகாம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் விளைநிலங்களுக்கு செல்ல அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பொதுவாக களக்காடு மலையடிவாரத்தில் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகள் நடமாட்டம் காணப்படும். தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் யானைகள் அட்டகாசமும் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்டவும், யானைகள் நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்