தமிழக செய்திகள்

போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை சரவணகுமாரும், அவரது குடும்பத்தினருடன் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் இதுகுறித்து அவர்கள், போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது