தமிழக செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தத்தில், வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

நத்தம் தர்பார் நகரை சேர்ந்தவர் கமலா (வயது 55). நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட கமலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 2 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஆகும். அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது