தமிழக செய்திகள்

வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

தினத்தந்தி

வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவர் சேனன்கோட்டை அருகே உள்ள மகாத்மாகாந்தி நகரில் புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டி வருகிறார். நேற்று கட்டிட வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வணிக வளாக பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு மாசி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கற்களுக்கு இடையே பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்தனர். அது சுமார் 4 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்கு கொண்டு சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து