தமிழக செய்திகள்

அண்ணாநகரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

அண்ணாநகரில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

அண்ணா நகர்,

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப். காலனியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடைய மகன் வேதநாயகம் (வயது 19). இவருடைய உறவினர் மகன் வசந்த் (19). இவர்கள் இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அண்ணா நகர், சாந்தி காலனி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது வேதநாயகத்தின் மீது தண்ணீர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வசந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்