கே.வி.குப்பம்,
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அருகே லத்தேரி அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் அரவிந்தன் (வயது 23), கூலித் தொழிலாளி.
இவர் ஜெயக்குமார் என்பவர் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியைத் தெரியாமல் மிதித்துள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கி அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.