தமிழக செய்திகள்

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

தூசி

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா அரசாணிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளையில் மின் ஒயர் பட்டு கோபாலகிருஷ்ணனை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது தம்பி முனுசாமி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து