தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.

தினத்தந்தி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 18). கொத்தனார் மற்றும் மேளம் அடிக்கும் தொழிலாளி.

பொங்கலன்று இரவு மூலைக்கரைப்பட்டி காக்கைகுளம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வரும்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு