தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலி

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலியானார்.

தினத்தந்தி

சேத்துப்பட்டு

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மேதி பலியானார்.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் ஞானசேகர் (வயது 22). நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சேத்துப்பட்டு, அருகே உள்ள கின்னனூர், கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆரணி-செஞ்சி சாலையில் செம்மாம்பாடி, கூட்ரோடு அருகே வந்தபோது சேத்துப்பட்டில், இருந்து ஆரணி, நோக்கி சென்ற கார் ஞானசேகர், மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஞானசேகர், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த சேத்துப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஞானசேகரின் தந்தை ஆசீர்வாதம் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு