தமிழக செய்திகள்

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை, 

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் வணிக வளாகம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலைசெய்து வருகின்றனர். கடந்த 16-ந்தேதி இங்கு பணியாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் (வயது 23) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார்.

பின்னர் குடிபோதையில் கட்டிடத்தின் மாடி பகுதிக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில், அவரின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?