தமிழக செய்திகள்

காதலிக்குமாறு கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

வாலிபரின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் செய்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 24). இவர் 16 வயதுடைய நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை மேற்கொண்டு போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து