தமிழக செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை நுங்கம்பாக்கம், செனாய் நகரை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மகன் ராஜேஷ் குமார் (வயது 22). நேற்று காலை ராஜேஷ் குமார் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் ராஜேஷ் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்