தமிழக செய்திகள்

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கி

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குப்பை தொட்டியில் கிடந்த பொம்மை துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

தினத்தந்தி

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை மெட்ரோ ரெயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அங்கிருந்த குப்பை தொட்டியில் கை துப்பாக்கி ஒன்று கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த கை துப்பாக்கியை கைப்பற்றி, புதுப்பேட்டையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, அது சினிமா படப்பிடிப்புகளுக்கும், தீபாவளிக்கு சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது. குப்பை தொட்டியில் பொம்மை துப்பாக்கியை வீசிச்சென்றது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு