தமிழக செய்திகள்

திரு.வி.க.நகரில் மரம் சாய்ந்ததால் மினிலோடு வேன் சேதம்

திரு.வி.க.நகரில் மரம் சாய்ந்ததால் மினிலோடு வேன் சேதம் அடைந்தது.

தினத்தந்தி

சென்னை திரு.வி.க. நகர், வேர்க்கடலை சாமி தெருவில் நேற்று மாலையில் சுமார் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. அப்போது அங்கு நிறுத்தி இருந்த வெற்றி நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது மரம் விழுந்தது. இதில் மினிலோடு வேன் சேதம் அடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ரமேஷ் தலைமையிலான செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். நல்லவேளையாக மரம் சாய்ந்து விழுந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அந்த வழியாக செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்