தமிழக செய்திகள்

கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் பரபரப்பு

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று சாலையை மறித்தவாறு அங்கேயே சிறிது நேரம் நின்றது.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலா வந்தது. அந்த யானை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சாலையை மறித்தவாறு அங்கேயே சிறிது நேரம் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதன் அருகில் செல்லாமல் விலகியே நின்றனர்.

இதன் காரணமாக அந்த சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த யானை ஒருவழியாக வனப்பகுதிக்குள் சென்றதால், மீண்டும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது