தமிழக செய்திகள்

சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை வங்கியில் விட்டுச்சென்ற பெண் - போலீஸ் தீவிர விசாரணை

தங்கத்தை விட்டுச்சென்ற பெண் 4 நாட்களாகியும் வங்கிக்கு திரும்பி வரவில்லை.

தினத்தந்தி

சென்னை,

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி வங்கிக்கு பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், தனது கணவருக்கு வங்கியில் கணக்கு இருப்பதாகவும், தனக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்களை அவர் எடுத்து வரவில்லை. இதனால் ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் பை ஒன்று இருந்ததை வங்கி ஊழியர்கள் பார்த்துள்ளனர். அதை பரிசோதித்து பார்த்ததில் 1 கிலோ எடை கொண்ட தங்க கட்டியும், 256 கிராம் தங்க சங்கிலி மற்றும் வளையல்களும் இருந்துள்ளது. ஆனால் கடந்த 4 நாட்களாகியும் அந்த பெண் வங்கிக்கு திரும்பி வரவில்லை.

இதனால் வங்கி அதிகாரிகள், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். மேலும் அந்த பெண் தனது பெயர் சர்மிளா பானு என வங்கி அதிகாரிகளிடம் அறிமுகம் செய்தது தெரிந்தது. மாயமான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் விட்டுச்சென்ற நகை மற்றும் தங்க கட்டியின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி