கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அடித்துக் கொன்ற வாலிபர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

சென்னை,

மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்த 50 வயது மதிக்கதக்க பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஆனால் அந்த பெண் உல்லாசத்துக்கு மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷேக் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனடியாக வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் மயங்கி கிடந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் பெயர் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர். மேலும் ஷேக்கை கைது செய்தனர். உல்லாசத்துக்கு மறுத்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் முகப்பேரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.