மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் கோடை... கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்..!

கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்றும், அக்டோபர் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்றும், அக்டோபர் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

Also Read
தேர்தல் ஆயத்த பணிகள்.. தலைமை தேர்தல் கமிஷனர் இன்று சென்னை வருகை
கோப்புப்படம்

இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் கொண்டவையாக காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.

Also Read
மின்சார ரெயில்கள் ரத்து: மக்களின் குமுறல்கள், போராட்ட களமாக மாறும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
கோப்புப்படம்

தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக் கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

Also Read
இலவச திரைப்படங்கள் வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை பயன்படுத்தாதீங்க: போலீசார் எச்சரிக்கை
கோப்புப்படம்

2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய 'லாநினோ' ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல்நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com