தமிழக செய்திகள்

வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவேற்காடு அருகே வெல்டிங் பணியின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இவர், திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று பாலமுருகன், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை