தமிழக செய்திகள்

சாலையோரத்தில் இறந்து கிடந்த இளம்பெண்

சாலையோரத்தில் இறந்து கிடந்த இளம்பெண் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகள் அபிநயா(வயது 23). இவர் நேற்று உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு அபிநயா கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை