தமிழக செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டையை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் பிரதீப்(வயது28). இவருக்கும், திருச்சியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜோதிலட்சுமி, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்