தமிழக செய்திகள்

வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உணவகம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி லட்சுமி மோகனூர் போலீசில் கொடுத்தபுகாரின் பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து