தமிழக செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

வாலிபர்கள்

கிருஷ்ணகிரி அருகே இட்டிக்கல் அகரம் அடுத்த தவளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர்.

இவருடைய மகன் ஆனஸ்ட்ராஜ் (வயது 20). கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் பிரசாந்த் (21). இவர்கள் இருவரும் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

விசாரணை

மோட்டார் சைக்கிளை பிரசாந்த் ஓட்டினார். ஆனஸ்ட்ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த ஆனஸ்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.

மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரசாந்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்