தட்டார்மடம்:
தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிக்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சாத்தன்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.பி.புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியின் 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடமும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஹேண்ட் பால் போட்டியில் 2-வது இடமும், சிலம்பம் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவர் பிரிவு 30 கிலோ எடை பிரிவில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமைச் சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் வசந்த், ஜெபத்துரை, ராஜேஷ், ஜெபசீலன், ஆக்னஸ் ஆகியோரை பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.