தமிழக செய்திகள்

ரேசன் கடைகளில் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் எச்சரிக்கை

ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுதான்சு பாண்டே கூறியுள்ளார்.

தினத்தந்தி

ராமேஸ்வரம்,

தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலர் சுதான்சு பாண்டே, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதி நகர் அருகே உள்ள மக்கள் அங்காடிக்குச் சென்று, அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேசன் கடைகளில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், விருப்பமில்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினார் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து